loader
Back to Conscious Planet Homepage

"காவேரி" என்றால் "குறைவின்றி அள்ளிக் கொடுப்பவள்" என்று பொருள்படும். மாபெரும் நதியாக, வளமும் செல்வச்செழிப்பும் வாரிவழங்கும் சக்தியாக இருந்த காவேரி இன்று வலுவிழந்து இருக்கிறாள்

 கடந்த வருடத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக விவசாயிகளின் துயரமும் தற்கொலைகளும் தேசியளவில் பேசப்படும் தலைப்புச்செய்திகளாக ஆகியுள்ளன. காவேரி வற்றி வருவதும் விவசாயிகளின் துயரமும் ஒரே பிரச்சினையின் இருவேறு வெளிப்பாடு.

one-problem-two-faces

வற்றிவரும் காவேரியின் நிலை

  • கடந்த 70 ஆண்டுகளில் காவேரி ஆறு 40% வற்றிவிட்டது
  • காவேரி வடிநிலத்தின் 87% மரப்போர்வை அகற்றப்பட்டுள்ளது
  • கோடைக்காலத்தில் கடலை சென்றடைவதற்கு முன்பே காவேரி வற்றிவிடுகிறது.
  • காவேரி வடிநிலத்தின் 70% நிலத்தில் மண்ணரிப்பு ஏற்படுகிறது

 

விவசாயியின் துயரம்

  • தமிழகத்தில் 83% விவசாயிகளும், கர்நாடகத்தில் 77% விவசாயிகளும் கடன்பட்டு இருக்கிறார்கள்
  • 2019ல் தமிழகத்தின் 17 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது
  • கடந்த 18 ஆண்டுகளில், 15 ஆண்டுகள் கர்நாடகத்தில் வறட்சியான ஆண்டுகளாக இருந்துள்ளன
  • காவேரி வடிநிலத்தின் 50% க்கும் மேற்பட்ட இடங்களில் நிலத்தடி நீர் பெருமளவில் குறைந்துள்ளது
TREES-disappear

எதனால் காவேரி வற்றிவருகிறது?

இந்தியாவிலுள்ள பெரும்பாலான நதிகளைப் போல், காவேரியும் காடுகளிலிருந்தே பிறக்கிறது. முன்காலத்தில் இருந்தே இப்பகுதியில் காடுகளும் மரங்களும் நிறைந்திருந்தது. விலங்குகளின் கழிவுகள் மூலமாகவும் தாவரக் கழிவுகள் மூலமாகவும் மண்ணிற்கு ஊட்டச்சத்தும் உயிர்மச்சத்தும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த உயிர்மப் பொருள் மண்ணின் தண்ணீர் ஈர்க்கும் சக்தியை அதிகரித்து, அந்நீர் காவேரியில் ஓடுவதற்கு வழிசெய்தது.

மரங்கள் குறையத் துவங்கியதும்...

மக்கட்தொகை அதிகரிப்பாலும்,  திறனற்ற விவசாய முறைகளாலும் மரப்போர்வை அதிகளவில் குறைந்து, மண்ணிற்கு ஊட்டச்சத்து கிடைக்காமல் போகிறது. இப்போது தண்ணீர் ஈர்க்கமுடியாமல் போவது மட்டுமல்ல, மண்ணரிப்பும் வேறு ஏற்படுகிறது. தண்ணீர் ஈர்க்கும் திறனை மண் இழந்ததால், காவேரியின் நீரோட்டமும் குறைகிறது. இதனால் காவேரி ஆறு வற்றிக் கொண்டே போகிறது. குறைந்து வரும் தண்ணீர் வளமும், வளமிழந்து கொண்டிருக்கும் மண்ணும் விவசாயியை பெருமளவில் பாதிக்கிறது. வாடும் பயிர்களும் அமிழ்த்தும் கடனும் அவரை தீராத துயரத்தில் ஆழ்த்துகிறது.

save-river

காவேரியைக் காப்போம்

இந்த நெருக்கடியான சூழ்நிலையை மாற்ற, காவேரிக்கு புத்துயிரூட்ட, மண்ணை வளமாக்க, விவசாயியின் வருமானத்தை அதிகரிக்க, காவேரி கூக்குரல் இயக்கம் 242 கோடி மரம் நட விவசாயிகளுக்கு கைகொடுக்கும். இந்த 242 கோடி மரங்கள் காவேரி வடிநிலத்தின் தண்ணீர் தக்கவைக்கும் திறனை 40% வரை அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Rally for Rivers

Rally for Rivers is a movement to save India’s lifelines. It was supported by over 162 million people. Sadhguru launched Rally for Rivers in September 2017 by personally driving over 9300 km across India to raise awareness about the dire situation of our rivers. Rally for Rivers provides a comprehensive solution to save India’s rivers, and is unique in its structure as a primarily economic program with a significant ecological impact.

Rally for Rivers