கிராம புத்துணர்வு இயக்கம்
"உங்களைச் சுற்றியுள்ள உயிர்களை எவ்வளவு ஆழமாகத் தொடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் வாழ்க்கை வளமானதாக இருக்கும்." – சத்குரு
கிராமப் புத்துணர்வு இயக்கம் பல அணுகுமுறைகள் கொண்ட ஒரு முழுமையான நற்பணி இயக்கம். ஈஷா அறக்கட்டளையின் சமூக நல பிரிவான ஈஷா நற்பணியின் கீழ் இந்த இயக்கம் நிறுவப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள் கிராமப்புற சமுதாயங்களுக்கு புத்துயிர் அளிப்பது, நிலையான வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவது ஆகும். கிராமப்புற மக்கள் சந்திக்கும் சிக்கலான பல பிரச்சனைகளுக்கு விரிவான அணுகுமுறையை எடுத்துள்ள இந்த இயக்கம் முழுமையான சுகாதார மேம்பாடு, சமூக புத்துணர்ச்சி, பேரிடர் மேலாண்மை மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் என பல செயல்முறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.
2003-ம் ஆண்டிலிருந்து எங்களது செயற்பாடுகள்
7500
தென்னிந்தியாவின் கிராமங்களுக்கு சென்றடைந்துள்ளது
113 லட்சம்
மக்கள் இதனால் பயனடைந்துள்ளனர்
52 லட்சம்
நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது
41,407 வீரர்கள்
2018 (14வது) - கிராமோத்சவத்தில் பங்கு கொண்டனர்
1063 விவசாயிகள்
தமிழ்நாட்டில் முதல் இடத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு
486
கழிப்பறைகள் கட்டப்பட்டன
92,520 மக்கள்
யோகா பயின்றனர்