ஆரம்பத்தில் அனைவருக்குமான பொதுக் கழிப்பறைகள் கிராமங்களில் உருவாக்கப்பட்டன. ஆனால் அவை சுத்தமாகவும் சுகாதாராமாகவும் பராமரிக்கப்படவில்லை. அதனால் கிராம மக்கள் அவற்றை உபாயயோகிப்பத்தை புறக்கணித்தனர். முக்கியமாக பெண்கள் தங்கள் வீட்டிலேயே கழிப்பறை இல்லாத காரணத்தால் பலர் அவதிக்குள்ளானார்கள். அவர்கள் காலை கடன்களுக்கு திறந்த வெளியினை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர். அதுவும் இருட்டும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். மேலும் தங்களின் பாதுகாப்புக்காக மற்ற பெண்களை உடன் அழைத்துச் செல்லும் தேவையும் இருந்தது. இதன் காரணமாக மக்களின் உபாயயோகத்துக்கு ஏற்றவாறு சுகாதாரமான கழிப்பறைகள் கட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது.
இந்திய பிரதம மந்திரி மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களால் 2019 ஆண்டு உருவாக்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் நிறைவேறும் நோக்கில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.
நமது செயல் முறை
இந்த திட்டத்தின் நோக்கம் முடிந்தவரை பல வீடுகளில் கழிப்பறைகளை கட்டுவதே ஆகும். தொண்டாமுத்தூர் பகுதியில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் கழிப்பறைகளின் முக்கியத்துவத்தையும் அவற்றை சுத்தமாக பேணுவதன் அவசியத்தையும் மக்கள் அறியும் வண்ணம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. அங்குள்ள மக்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வயதானவர்களும் மாற்றுத்திறனாளிகளும் உள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அந்த குடும்பம் தங்கள் வீட்டின் அருகில் கழிப்பறைக்கான குழி அமைத்துக் கொடுத்தவுடன் ஈஷா அங்கு முழு கழிப்பறையை கட்டிக்கொடுக்கிறது.
கழிப்பறை கட்டப்பட்டவுடன் அதை எவ்வாறு பராமரிப்பது, சுகாதாரத்தை எவ்வாறு பேணுவது என்பதும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் மக்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
என்.முத்துலட்சுமியின் கதை
தூய்மையான கழிப்பறைகள் திட்ட நிகழ்வுகள்
நான் இந்த பகுதியில் கடந்த பத்து வருடமாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தொடர்பில் இருங்கள்
Get the latest updates on projects and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.