Share

தீபாவின் கதை

உத்வேகம் தரும் மனிதர்களின் கதைகள்

date

20 Aug 2019

time

12:17 pm

என் பெயர் தீபா. 27 வயது. எனது சொந்த ஊர் சேலம் அருகே உள்ளது. நான் வேலைக்காக கோவைக்கு மாற்றம் ஆனேன். நான் நீண்ட காலமாக மிகவும் சோர்வாக உணர்ந்தேன்.

தீபாவின் கதை


என் பெயர் தீபா. 27 வயது. எனது சொந்த ஊர் சேலம் அருகே உள்ளது. நான் வேலைக்காக கோவைக்கு மாற்றம் ஆனேன். நான் நீண்ட காலமாக மிகவும் சோர்வாக உணர்ந்தேன். எனது அன்றாட வேலைகளை என்னால் செய்ய முடியவில்லை. அந்த இயலாமையால் என் கணவர் தொடர்ந்து என்னைத் திட்டி வந்தார். நான் பல மருத்துவர்களை அணுகினேன், அவர்கள் எனது இரத்த அளவு குறைவாக இருப்பதாக சொன்னார்கள். ரத்த பரிசோதனை செய்யும்படி என்னை வற்புறுத்தினார்கள். எனது வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் செல்ல எனக்கு நேரமும் தேவையான ஆதரவும் இல்லை. சோதனைக்குத் தேவையான தொகையும் என்னைத் தொந்தரவு செய்தது. எனவே எனது பிரச்சினைகளுடன் தொடர்ந்து வாழ்ந்தேன். முட்டத்துவயலில் உள்ள ஈஷா கிராம மருத்துவமனை குறைந்த செலவில் இரத்த பரிசோதனைகள் செய்து வருவதை சமீபத்தில் அறிந்தேன். எனவே, நான் அங்கு சென்றேன், நான் ஒரு இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர் வலியுறுத்தினார். அதை நான் செய்தேன். முடிவுகள் வந்தன. எனது ரத்தத்தில் உள்ள அளவு 5.9 கிராம் / டி.எல் இருப்பதாக மருத்துவர் கூறினார். பெண்களுக்கு சாதாரணமாக எச்.பி. (ஹீமோகுளோபின் ) அளவு 12 முதல் 15 கிராம் / டி.எல் வரை இருக்கும் என்றும், எனக்கு அது குறைவாக உள்ளது பற்றியும் தெளிவுபடுத்தினார். மேலும், அவர் இரும்பு மற்றும் மல்டிவைட்டமின் சிரப் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளையும் கொடுத்தார். சத்தான உணவு பற்றி விளக்கினார். நான் இப்போது மீண்டு வருகிறேன், முன்பை விட மிகவும் சுறுசுறுப்பாக உணர்கிறேன். குறைந்த செலவில் ஆய்வக மற்றும் மருத்துவ வசதி வழங்கி , நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் ஈஷா கிராம மருத்துவமனைக்கும் மருத்துவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.


Related Stories

No Specific Title

சிறிய நன்கொடைகளில் வெளிப்படும் பெரிய உள்ளங்கள்! #BeatTheVirus - ஈஷா டைரி பாகம் 25

date

30 May 2020

time

04:15 am

தொண்டாமுத்தூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் 75 கிலோ அரிசியை நன்கொடையாக ஈஷா தன்னார்வத் தொண்டர்களுக்கு வழங்கினார்; வியாபாரிகள் குளிர்பானங்களை நன்கொடையாக வழங்கினர். வயதில் மூத்த குடிமகன் ஒருவர் களத்தில் நம்முடன் துணை நிற்க இணைந்தார். இவ்வாறு கிராமப்புற சமூகங்கள் உறுதியுடன் கொரோனா வைரஸை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.

No Specific Title

சவாலான இந்நேரத்தில் முதியவர்களை பாதுகாக்கும் தன்னார்வலர்கள்! #BeatTheVirus - ஈஷா டைரி பாகம் 24

date

18 May 2020

time

09:56 am

இந்த நோய்த்தொற்று காலம் முக்கியமாக வயதானவர்களுக்கு தனிமைப்படுத்துதல் மற்றும் தங்கள் முதுமையால் செயல்பட முடியா வண்ணம் இருப்பது என மிகக்கடினமான காலமாக உள்ளது. எத்தனை துன்பங்கள் இருந்தபோதிலும் கிராமங்களில் உள்ள பல முதியவர்கள் அந்த துன்பங்களை எதிர்த்து போராடும் விடாமுயற்சியுடன் இருக்கின்றனர்.

No Specific Title

துன்பத்திலும் புன்னகைக்க மறக்காத உள்ளங்கள்… #BeatTheVirus ஈஷா டைரி - பாகம் 8

date

02 May 2020

time

09:30 am

ஈஷா தன்னார்வலர்களின் அயராத உழைப்பும், நம்பிக்கையை உண்டாக்கும் அவர்களின் இருப்பும், கிராம மக்களின் உள்ளத்தில் கருணையையும் பரிவையும் உருவாக்கியுள்ளது. வைரஸை வெல்வோம் என்ற முனைப்போடு போராடிவரும் அவர்களின் சில முயற்சிகள் உங்கள் பார்வைக்காக இங்கே.

Keep In Touch

Get the latest updates on blog and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.

terms & conditions

CONTACT US

Address:

வெள்ளிங்கிரி மலையடிவாரம்,

ஈஷான விஹார் அஞ்சல்,

கோவை - 641114

தொடர்பு எண்:

DOWNLOAD OUR APP

FIND US ON SOCIAL MEDIA