முகப்பு பக்கம்

>

கிராம புத்துணர்வு இயக்கம்

>

வலைப்பதிவு

>

களத்தின் கதைகள்

>

முன்களப் பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு ஊட்டச்சத்து உணவுகள், மருத்துவ உதவிகள் போன்ற நம்பிக்கையை வழங்கும் ஈஷா!

Share

முன்களப் பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு ஊட்டச்சத்து உணவுகள், மருத்துவ உதவிகள் போன்ற நம்பிக்கையை வழங்கும் ஈஷா!

களத்தின் கதைகள்

date

17 Jun 2021

time

07:30 am

கர்நாடகாவிலுள்ள ஈஷா தன்னார்வலர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா பராமரிப்பு மையங்களின் மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்களை விநியோகித்து வருகின்றனர். வசதிவாய்ப்பற்ற கிராமப்புற சமூகங்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சனைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக, தன்னார்வலர்கள் மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளுக்கு சென்று உணவு தானியங்கள் மற்றும் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

கொரோனா இரண்டாவது அலை நம்மில் பெரும்பாலோரை வீட்டுக்குள்ளேயே முடக்கியிருந்தபோது, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இறப்புகள் அதிகரித்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வேளையில், ஈஷா தன்னார்வலர்கள் அனைத்து இடர்பாடுகளையும் கடந்து முன்களப் பணியாளர்கள், நோயாளிகள், பழங்குடி மக்கள் மற்றும் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள வசதிவாய்ப்பற்ற பிற சமூகங்கள் என பலருக்கும் ஊட்டச்சத்து பொருட்கள், மருத்துவ உபகரணங்களோடு தங்கள் அக்கறையையும் ஆதரவையும் வழங்கத் துணிந்துள்ளனர்.


கொரோனா கள வீரர்களை கவனித்தல்


மன உறுதியை அதிகரிப்பதற்கும் அயராது களப்பணியாற்றும் மருத்துவ குழுக்களின் பசியைத் தணிப்பதற்கும், கர்நாடகாவிலுள்ள ஈஷா தன்னார்வலர்கள், மருத்துவப் பணியாளர்கள், அரசு மருத்துவமனைகளின் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பெங்களூருவிலுள்ள கொரோனா பராமரிப்பு மையங்களுக்கும், கொரோனா நோயாளிகளுக்கும், சத்தான உணவுகளையும் பானங்களையும் விநியோகிக்கின்றனர். ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் பெங்களூரு, மைசூரு, மண்டியா, மங்களூரு, உடுப்பி, சிக்மகளூர், சிக்கபல்லாபூர் மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்டங்களிலுள்ள 55 முக்கிய அரசு மருத்துவமனைகளுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குகிறார்கள். கடந்த 45 நாட்களில், தன்னார்வத் தொண்டர்கள் 4.46 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு விநியோகித்துள்ளனர்.



ஆரம்பக் கட்டத்தில், உணவுப் பொட்டலங்களின் விநியோகம் 2021 ஜூலை 1ம் தேதி வரை மட்டுமே தொடர திட்டமிடப்பட்டது. ஆனால், உதவியும் தேவையும் அதிகமாக இருப்பதை உணர்ந்த ஈஷா தன்னார்வலர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உணவு மற்றும் உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளைத் தொடர்வதற்கு முடிவு செய்துள்ளனர்.


அதிகமான மக்கள் தரமான மருத்துவப் பராமரிப்பு மற்றும் சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, சிக்கபல்லாபூரில் உருவாகிவரும் மருத்துவமனைக்கு ஈசிஜி இயந்திரங்கள், மல்டி-பாராமீட்டர் மானிட்டர்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவமனை பராமரிப்பு பொருட்களை ஈஷா வழங்கியுள்ளது.



blog_alternate_img


கிராமங்களில் விநியோகிக்கப்படும் ரேஷன் பொருட்கள்


தொற்றுநோய் கிராமப்புற பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பைக் கொடுத்துள்ளது. கொரோனா காலத்தில் வாழ்வாதாரங்கள் குறைந்துவிட்டதால் கர்நாடக கிராமங்களிலுள்ள மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பெற முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிச்சயமற்ற தன்மை மற்றும் வளங்களின் பற்றாக்குறை நிலவும் சமயத்தில், கிராமப்புற மக்களுக்கு உதவுவதற்காக கடந்த வாரம் ஈஷா தன்னார்வலர்கள் சமூக இடைவெளியுடன் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடித்தபடி தொலைதூர கிராமங்களுக்குச் சென்று, சிக்கபல்லாபூர் மற்றும் அருகிலுள்ள தாலுகாக்களில் 685 நாடோடி பழங்குடியினருக்கு ரேஷன் கிட்களை விநியோகித்தனர்.


கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே.சுதாகர், சிக்கபல்லாபூர் துணை ஆணையர் R.லதா மற்றும் பிற அரசு அதிகாரிகள் முன்னிலையில், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கிட்கள் பழங்குடி சமூக மக்களுக்கு வழங்கப்பட்டன. சிக்கபல்லாபூர் மாவட்ட கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கு 1600 ரேஷன் கிட்களை விநியோகிக்க ஈஷா தீர்மானித்துள்ளது.



ஆன்லைன் மூலம் உதவி


நேரடியாகச் சென்று உதவுவது தவிர, அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா மையங்களில் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்றுநோயை எதிர்கொள்வதில் ஆன்லைன் மூலமாக ஈஷா உதவுகிறது. கடந்த மாதம் முதல், ஈஷாவில் தன்னார்வத் தொண்டு செய்யும் 250க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் BBMP மற்றும் மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து, கொரோனா நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆன்லைன் உதவிகளை வழங்கி வருகின்றனர்.


Related Stories

No Specific Title

கொரோனா காலத்தில் மனிதநேயத்தை நிரூபிக்கும் 5 நிகழ்வுகள்: #BeatTheVirus

date

20 May 2020

time

11:50 am

உலகம் முன்னெப்போதும் கண்டிராத வகையில் சவாலான இந்த சூழ்நிலையில், பல கிராமப்புற மக்கள் தங்களுக்கான அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து அடுத்தவரிடம் இருந்து உதவியை எதிர்பார்க்கும் சூழலுக்கு எப்போதோ சென்றுவிட்டனர். இத்தகைய துன்பமான காலங்களிலும், மிகவும் உத்வேகம் தரும் நிகழ்வுகள் மனிதகுலத்தின் மேன்மையை நமக்கு நினைவூட்டுகின்றன.

No Specific Title

சிறிய கரங்கள் பெரிய உதவி! #BeatTheVirus ஈஷா டைரி - பாகம் 19

date

13 May 2020

time

01:25 pm

8 வயதே நிரம்பிய இரட்டை சகோதரர்களான சிறுவர்கள் சூர்யா மற்றும் ஸ்ரீனிவாஸ் தங்களுக்குள் இருந்த வேற்றுமையை விட்டு, சண்டையிடுவதை நிறுத்திவிட்டு ஈஷா தன்னார்வலர்களுக்கு உதவ வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை நிறைவேற்றினர். #வைரஸைவெல்வோம் என்ற தீவிரமான நோக்கத்துடன் உதவிக்கரம் நீட்டிய அவர்கள் பல கிராமப்புற சமூகங்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தனர்.

No Specific Title

உரிய நேரத்தில் உதவி செய்து உள்ளத்தை தொடும் தன்னார்வலர்கள்! #BeatTheVirus ஈஷா டைரி - பாகம் 12

date

06 May 2020

time

12:29 pm

இந்த நோய்த்தொற்று காலத்தில் கிராம மக்கள் முன்னின்று அதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முள்ளாங்காடு கிராமத்தில் உணவு விநியோகிக்க தன்னார்வலர் நவீன் உதவி வரும் வேளையில், உணவை பொட்டலம் கட்டுவதற்காக நரசீபுரத்தைச் சேர்ந்த தியாகராஜன் தன் 10 ஏக்கர் நிலத்திலிருந்து வாழை இலைகளை நன்கொடையாக அளித்துள்ளார்.

Keep In Touch

Get the latest updates on blog and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.

terms & conditions

CONTACT US

Address:

வெள்ளிங்கிரி மலையடிவாரம்,

ஈஷான விஹார் அஞ்சல்,

கோவை - 641114

தொடர்பு எண்:

DOWNLOAD OUR APP

FIND US ON SOCIAL MEDIA